×

அமைந்தகரையில் நண்பர்களுக்குள் மோதல் 2 பேருக்கு கத்தி வெட்டு; 2 பேர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்சர் அலி (21). சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் (24), லோகு சின்னயா (23). சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (28). இவர்கள் 4 பேரும் சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மோகன்ராஜ், கோபிநாத் ஆகியோர் அப்சர் அலியை சரமாரியாக தாக்கி அவரது செல்போனை உடைத்து நொறுக்கினர். அவர்களை லோகு சின்னயா விலக்கிவிட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லோகு சின்னயாவின் தலையில் வெட்டினர். அப்சர்அலியை வெட்டும் போது தடுத்ததால் அவரது கையில் வெட்டு விழுந்தது. பின்னர் இருவரும் தப்பி விட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் மோகன்ராஜ், கோபிநாத் ஆகியோர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருபாநீதி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post அமைந்தகரையில் நண்பர்களுக்குள் மோதல் 2 பேருக்கு கத்தி வெட்டு; 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sulatakara ,Annanagar ,Nadalkarai ,Absar Ali ,Pudukottai district ,Mohanraj ,Loku Chinnaya ,Nitakarai ,Chennai ,
× RELATED செவிலியரை தாக்கியதாக பெண் மருத்துவர் மீது புகார்